Monday, January 5, 2009

... தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்

இன்று இலங்கையில் ஒரு இனவொழிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ் உணர்வுள்ள தமிழன் எல்லாம் நொந்துப் போயுள்ளனர். தம் இனத்திற்காக குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை இட்டு கொதித்துப் போயுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து கட்சியும் ஒன்றினைந்து மத்திய அரசுக்கு மகஜர் அனுப்பியும் பார்த்தாயிற்று. தமிழினத் தலைவர் என்று கூறிக்கொள்பவரின் பேச்சையும் மத்திய அரசு சட்டை செய்வதாக இல்லை.

இலங்கையில் புலிகளை சுத்தி வலைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சுத்தி வலைக்கப்பட்டிருப்பது புலிகளை மட்டுமல்ல. நான்கு இலட்சம் தமிழர்களையும் தான். நான்கு புறமும் சுத்தி வலைக்கப்பட்ட நிலையில் அந்த மக்களுக்கு எந்த வழியால் உணவு செல்லும்? அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்கப் உணவின்றி இருக்கமுடியும்? அம் மக்களையெல்லாம் உணவின்றியே சிங்கள அரசு கொன்று குவிக்க தருனம் பார்த்து நிக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் எல்லா தமிழனும் கலங்கிப் போயுள்ளான் உணர்வு உள்ள எல்லா தமிழனுக்கு இது இரத்தம் கொதிக்கும் செயல். இன்று தமிழ்நாடே ஒன்று திரண்டு குரல் எழுப்புகிறது.

ஆனால் தமிழ்நாட்டுக்குள் தமிழனோடு, தமிழன் போன்றே இருந்துக் கொண்டு தமிழ் இன அழிப்பை ரசிக்கும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது துக்ளக் சோ முதல் டோண்டு வரையான பார்ப்பனக் கூட்டம்.

இது சிங்களவனை விட மிக மோசமான பயங்கரக் கூட்டம்.

நாளை தமிழ்நாட்டுத் தமிழன் அழிந்தாலும் இந்தக் கூட்டம் இதைத்தான் செய்யப் போகின்றது.
எல்லாம் தமிழன் தலை விதி.

இந்தக் கூட்டத்தை தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்.

Tuesday, March 18, 2008

ஜாதிகள் ஒழிய வழி

நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ``நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி''யாக ஆகிவிட்டது.

காரணம் என்னவென்றால், ``கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக் கூடாது'', ``நம்பவேண்டும்'', ``அப்படியே ஒப்புக் கொள்ளவேண்டும்'' என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல; அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி, ``கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது? நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்ய வேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?'' என்பதுபோன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக் கூறுவேன்.

நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்துச் சிந்தித்து அறிவில், ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கு இல்லாமல் தெரிந்து கொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமலே போய்விட்டது. தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்'' என்றால், அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி ஜாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? ஆகவே, இந்த ஜாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும்.

இதனாலேதான் ``ஜாதி கெடுதி, ஜாதி கூடாது'' என்று சொல்லத்தான் சில ``பெரியவர்கள்'' முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை.

ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் ஜாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே உங்கள் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் ஒழித்துக் கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் ஜாதி மறையும், ஜாதி ஒழியும். மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு ஜாதி சாகாது. ஆகவே, ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுங்கள்.

நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

தந்தை பெரியார்.

Wednesday, March 12, 2008

சாத்தானும் சயித்தானும் ஒண்ட தலையும்

திருநெல்வேலியில் இறங்கி ஆத்தூர் போவதற்கு பேரூந்து நிறுத்தகத்திற்கு அவசர அவசரமாக ஓடினேன். ஆத்தூருக்கு போகும் பேரூந்து நிறுத்தும் இடத்தில் இல்லாமல் சற்று தள்ளி பேரூந்து நிறுத்தப்பட்டிருந்தது. பேரூந்தின் முகப்பிலும் பேர் பலகையை காணவில்லை.

இது ஆத்தூர் போகும் பேரூந்து தானா என்று ஒரு சந்தேகம்.

பேரூந்து விசாரனை கூட்டில் சில பேரூந்து ஓட்டுனர்கள் இருப்பதைக் காணவே சென்று கேட்டேன். “இந்த பேரூந்து ஆத்தூர் போகுமா?”

ஒருவர் கூறினார் “எனக்குத் தெரியாது.”

மற்றவர் “கொஞ்சம் பொறுங்கள் யாரிடமாவது கேட்டுச்சொல்கின்றேன்.”

சரி வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று திரும்பும் போது ஒருவர் தென்பட்டார். அவரும் பேரூந்து ஓட்டுனர் போல் தான் தெரிந்தார். அவரிடம் கேட்டேன். ஐயா இந்த பேரூந்து ஆத்தூர் போகுதா?

“ஒண்ட தலைக்கு போகுது”. பதில் கடுகடுப்பாக வந்தது.

ஆமாம், தனக்குத் தெரியாது வேறு யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் என்று கூறும் மனப் பக்குவம் கூட இல்லாது, தனக்கு தெரியாது என்பதை வெளிப்படையாக கூற விரும்பாத இதுப்போன்றவர்களால் தமது அறியாமையை மறைப்பதற்கு உதிர்க்கும் சொற்களே இவை.

நீங்களும் இதுப்போன்ற நபர்களை சந்தித்திருக்கலாம். கேள்விக்கேற்ற பதிலின்றி எடக்கு முடக்கான பதில் அளிப்பார்கள். உண்மையில் தனக்கு தெரியாது என்பதை 'தெரியாது' என்று ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கூட அற்ற மடையர்கள். அந்த அறியாமையின் வெளிப்பாடே ஆத்திரமான பதில்களாக "ஒண்ட தலைக்கு போகுது" போன்ற வார்த்தைகளாக வெளிவருகின்றது.

இன்னும் சிலர் உள்ளனர், தனக்கு தெரியாது என்பதை 'தெரியும்' என்று கூறி தமது பிற்போக்கு சிந்தனைகளை மற்றவர்களில் புகுத்த முனைபவர்கள். பிளையாக வழிகாட்டி விடுவர்கள்.

இதுப்போன்றதே மதங்களும்.

பிளையான வழிக்காட்டல்களை எந்தவித பகுத்து ஆய்வுகளும், பகுத்தறிவும் இன்றி அப்படியே அதை சத்தியம் என்றும் நம்பிவிடுகின்றனர்.

இவ்வாறு நம்புகின்றவர்களையே பிழையான வழிக்காட்டிகளுக்கும் மிகவும் பிடிக்கும். தமது வழிகளை இவர்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்பதால், உலக அறிவியல் ஆதாரங்களைக் கூட தமது பொய் பிரச்சாரங்களுக்காக ஏற்றாற்போல் திரிபுபடுத்தி அதையும் தமது மத சார்பு கருத்துக்களாக முன் வைப்பர். இதுவே சத்தியம் சத்தியம் என்றும் புனிதம் புனிதம் என்றும் போற்றுவர்.

இந்த கருத்துக்கள் ஏற்கக் கூடியதாக இல்லயே என்று யாரும் கேட்டுவிட்டால். இப்படியல்லாம் கேட்கக் கூடாது. இப்படியெல்லாம் கேட்பது இறைவனை இகழ்வதாக இருக்கும் என்று அவர்கள் அறிவையே முடக்கி விடுவர்.

இவர்களின் மூடக்கருத்துக்கு எதிரான கருத்துக்களை வளரவிடாமல் செய்வதில் தமது அறிவை பயன் படுத்தியே தம்மையும் மூடனாக்கி தம்மை சார்ந்தவர்களையும் மூடர்களாகவே காலாகாலமாக வைத்துக்கொள்வர்.

யாராவது அதையும் மீறி கேள்விகள் கேட்டால்.

"ஒண்ட தலைக்கு போகுது” என்பதுப் போல் “நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்கின்றாய் இதை நீ கேட்கவில்லை சாத்தான் உன்னை இப்படி கேட்கவைக்குது." என்றும் "இதுப்போன்ற கேள்விகளை எழுப்பப்படுவது சாத்தானின் வேலை" என்றும், இல்லாத சாத்தானையும் சயித்தானையும் கூறி பதில் கூறு முடியாத விடயங்களுக்கு பதிலாக கூறிவிடுவர்.

தொடர்ந்தும் மக்களை சிந்திக்க விடாது, உண்மையை அறிய விடாது சாத்தான் சயித்தான் என்று அச்சுறுத்தி பயமுறுத்தி தாமும் எதையும் பகுத்து அறியாமல், தம்மை சார்ந்தவர்களையும் பகுத்து அறியவிடாமல் தொடரும் மூடக்கருத்துக்களின் பிரச்சாரங்கள் என்று ஒழியப்போகின்றதோ? இவர்கள் தம் மதங்களை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து தம் சமுதாயத்தையே மூடர்களாக்கிக்கொள்கின்றார்கள்.

உண்மையில் சாத்தானும் சயித்தானும் என்பது தமது மார்க்கங்களின் புதைந்து கிடக்கும் மூடக்கருத்துக்களுக்கு அறிவியல் ஆதாரங்கள் அளிக்க முடியாத நிலையில், பகுத்து அறிந்துப் பார்க்கும் மனிதர்களின் கேள்விகளில் இருந்து தம் கருத்துக்களை நியாயப்படுத்துக்கொள்ள அல்லது கேள்விகள் வராமல் தடுத்துக்கொள்ள உபயோகிக்கும் ஒரு தந்திரோபாய கவச சொற்கள் மட்டுமே இவைகள்.

Tuesday, March 11, 2008

இன்று அதிகாலை வானத்திலிருந்து திருக்குறள் விழுந்தது

ஆமாம் இன்று சரியாக அதிகாலை 5.18 மணியளவில் வானத்தைப் பார்த்தால், பிரகாசமாக வால்நட்சத்திரம் போன்று ஒன்று வந்து விழுந்தது. ஓடிப்போய் விழுந்த இடத்தில் என்னவென்று பார்த்தால், என்ன அதிசயம்! அது திருக்குறள் புத்தகம். இப்படி ஒரு கதையை நான் சொன்னால் நீங்கள் என்னை பைத்தியக்காரி என்பீர்கள்.

எழுத்தை கண்டிப்பிடித்ததில் அல்லது உலகிற்கு அறிமுகப் படுத்தியதில் பல் வேறுப்பட்ட கருத்துக்கள் நிழவுகின்றன. ஆனால் கடதாசியை கண்டுப் பிடிக்கப்பட்டது எத்தனையாம் ஆண்டு? யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? என்பது பலருக்கு தெரியும்.

எழுத்தறிவு என்று வளர்ச்சியடைந்தது?

புத்தகங்களாக என்று எழுதத் தொடங்கப்பட்டது?

எழுத்துக்கள் அச்சு எழுத்துக்களாக என்று உருவானது?

எழுத்தாய்வாளர்களால் எந்த ஒரு பழங்கால எழுத்தையும் ஆய்வு செய்து, அது எத்தனை வருடங்கள் தொன்மையானது, குறிபிட்ட எழுத்து வடிவங்கள் எந்த காலத்தில் வழங்கப்பட்டது, என்றெல்லாம் ஆய்வு அறிக்கைகளை, ஆதார பூர்வமாக அறிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

50 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களான டைனோசர் காலத்தையும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளுடன் திரைப்படமாக வெளியிடப்படுகின்ற காலம் இது.

இத்தனை அறிவியல் நுட்ப வளர்ச்சிகள் மிகுந்த இவ்வுலகில், நான் வானத்திலிருந்து திருக்குறள் விழுந்தது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? நம்பமாட்டீர்கள். ஆனால் ஒரு சாரரால் வானத்தில் இருந்து புனித நூல் விழுந்தாக புருடா விட்டுக்கொண்டிருக்கிறார்களே, இவர்களின் அறிவை என்னவென்று கூறுவீர்கள்?

அறிவாளிகள் என்றா? அடிமட்ட முட்டாள்கள் என்றா? மதவாத மனநோயாளிகள் என்றா? நீங்களே கூறுங்கள்.

Sunday, March 9, 2008

பகுத்தறிவு மகா சமுத்திரம்

இந்த உரையில் கிணற்றுத் தவளை கூறுவதுப் போன்றே ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் தங்கள் மதங்களே சிறந்தது என்றும் பெரியது என்றும் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.

பகுத்தறிவு எனும் மகா சமுத்திரத்தைப் பற்றி அறிந்துக்கொள்ளாமல் அல்லது அறிந்துக்கொள்ள விரும்பாமல்.

மதம் எனும் மாயைப் பினியிலிருந்து விடுப்பட்டு, பகுத்தறிவு எனும் அறிவைப் பகுத்து அறிந்துப்பாருங்கள், மதம் எனும் மனநோயிலிருந்து குணமடையலாம்.

Saturday, March 8, 2008

நல்ல நேரமும் கெட்ட நேரமும்

நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் எம் முன்னோர் வழி வந்த மூடக்கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை.

எம்மால் பிரயோசனப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமே. மாறாக எம்மால் வீணடிக்கும் பொழுதுகளே கெட்ட நேரங்களாகும்.

Monday, February 18, 2008

நண்பர்களே!

அன்பான நண்பர்களே!

ஆறாவதறிவுப் பற்றி எழுதுவதால் என்னை ஒரு தத்துவ ஞானியாகவோ, அறிவியல் மேதையாகவோ நினைத்துவிடாதீர்கள். நான் மிக மிகச் சாதாரனமானவள். மாறக பலராலும் சொல்லப்படும் கருத்துக்களை அப்படியே ஏற்பவளுமல்ல கேட்பவளுமல்ல, அதேவேளை ஏற்காதவளுமல்ல.

எதையும் எனது ஆறாவதறிவுக்கு உற்படுத்தி அது ஏற்புடையதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து அறியும் சாதாரன ஒரு மனிதப்பிறவியின் கருத்து வெளிப்பாடுகளே இந்த வலைத்தளம்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியையும், அறிவியல் உச்சத்தையும் கூடத் தத்தமது பிரச்சாரத்திற்கும் வசதிக்கும் ஏற்றாற்போல், கருத்துருவாக்கத்தை உருவாக்கி, உண்மை ஒருப்புரம் இருக்க உண்மைக்கு புறம்பான விளக்கங்களைக் கொடுத்து சமூக சீரழிப்புக்களை மேற்கொள்ளும் பல அமைப்புக்களின் செயல்களையும், இனவெறியர்களையும், மதவாத மனநோயாளர்களையும் கண்டு கொதிக்கும் வேளை என்னுள் எழும், எனது ஆறாவது அறிவின் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு இங்கே, இந்த வலைப்பதிவில் பதில் கூறவிளைகின்றேன்.

இதில் எந்த ஒரு அமைப்பையும், மதத்தையும், இனத்தையும், தனிமனிதனையும் தாக்கும் அல்லது நோகடிக்கும் நோக்கம் கொண்டதுமல்ல. சமுதாயச் சீர்கேடுகளையும், காலக்காலமாக இருந்துவரும் மூடக் கருத்துக்களையும், அறிவியல் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதே இந்த வலைப்பதிவின் நோக்கமாகும்.

இந்த வலைத்தளத்தின் பதிவுகள் வெறுமனே ஆதாரமற்ற வீண் விவாதங்களுக்கான வித்திடமாக அமைந்துவிடக்கூடாது.

"வீண் விவாதம் சண்டைக்கான துவக்க விழா, ஆனால் அறிவுத் தர்க்கமே உண்மைக்கான திறவுக்கோள்."

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து இருக்கின்றது. எனது எந்த கருத்துக்கள் தொடர்பாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம்.

உங்கள் கேள்விகளை பகுத்து அறிந்து, உங்களது ஆறாவது அறிவின் வெளிப்பாடாக அதே வேளை மனித நாகரீகத்துடன் கேளுங்கள்.

நன்றி!